முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் வீட்டில் திருட்டு:பொலிஸில் முறைப்பாடு
முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் அலுவலகத்திலிருந்து பெறுமதியான தொலைக்காட்சியொன்று திருடப்பட்டுள்ளதாக மாளிகாவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தத் திருட்டுச் சம்பவமானது கடந்த (20.05.2023) திகதியன்று பதிவாகியுள்ளது.
இதற்கமைய முஜிபர் ரஹ்மானின் ஒருங்கிணைப்புச் செயலாளரினால் நேற்றுமுன்தினம் (22.025.20232) மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
இதன்போது திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த தொலைக்காட்சியானது சுமார் 50,000 ரூபாய் பெறுமதியான 32 அங்குலம் அகலத்திரை கொண்டதாகும்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மாளிகாவத்தை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |