பதுளை பகுதியில் தம்பதியினர் கைது
பதுளை, பஹலவத்தை பகுதியைச் சேர்ந்த திருமணமான தம்பதியரை பதுளை பொலிஸார் நேற்று காலை கைதுசெய்துள்ளனர்.
அத்துடன், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து சுமார் இரண்டு மில்லியன் ரூபா கொள்ளைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
பொலிஸாரின் கூற்றுப்படி, 60 வயதுடைய நபரும் அவரது 57 வயது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைக்கு அடிமையான இளைஞரை பயன்படுத்தி திருட்டு
திருடப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர்கள், எரிவாயு அடுப்புகள், மின்சார உபகரணங்கள், இசைக்கருவிகள் மற்றும் பாதணிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அப்பகுதியில் போதைப்பொருளுக்கு அடிமையான இளைஞரைப் பயன்படுத்தி தம்பதியினர் திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு வந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மூன்றாவது சந்தேக நபரை கைது செய்வதற்கான தேடுதல் வேட்டையை பதுளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதுடன், முறையான விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளனர்.
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam