பதுளை பகுதியில் தம்பதியினர் கைது
பதுளை, பஹலவத்தை பகுதியைச் சேர்ந்த திருமணமான தம்பதியரை பதுளை பொலிஸார் நேற்று காலை கைதுசெய்துள்ளனர்.
அத்துடன், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து சுமார் இரண்டு மில்லியன் ரூபா கொள்ளைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
பொலிஸாரின் கூற்றுப்படி, 60 வயதுடைய நபரும் அவரது 57 வயது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைக்கு அடிமையான இளைஞரை பயன்படுத்தி திருட்டு
திருடப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர்கள், எரிவாயு அடுப்புகள், மின்சார உபகரணங்கள், இசைக்கருவிகள் மற்றும் பாதணிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அப்பகுதியில் போதைப்பொருளுக்கு அடிமையான இளைஞரைப் பயன்படுத்தி தம்பதியினர் திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு வந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மூன்றாவது சந்தேக நபரை கைது செய்வதற்கான தேடுதல் வேட்டையை பதுளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதுடன், முறையான விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளனர்.
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
சந்தோஷ செய்தி சொன்ன மீனா, ஆத்திரத்தில் விஜயா செய்த மோசமான காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam