வவுனியாவில் விவசாய அமைப்புக்கான கட்டிடம் வடக்கு ஆளுனரால் திறந்து வைப்பு
வவுனியா (Vavuniya), ஈரப்பெரியகுளம் பகுதியில் விவசாய அமைப்புக்கான கட்டிடம் வடக்கு மாகாண ஆளுனர் பீ.எஸ்.எம்.சாள்ஸால் நேற்று (22.07.2024) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கட்டிடம் வடமாகாண ஆளுனரால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டு விவசாய சங்கத்திடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது. குறித்த நிகழ்வின் நினைவாக மரநடுகையும் இடம்பெற்றது.
அத்துடன், சிங்கப்பூர் பௌத்த சங்கத்தின் நிதி உதவியில் ஈரப்பெரியகுளம் விவசாயிகளுக்கு 2000 ஏக்கர் நிலப்பரப்பில் உழுந்து, பயறு, கௌப்பி ஆகிய தானிய செய்கை மேற்கொள்வதற்கான உதவித் திட்டம் வழங்குவதற்கான செயற்பாடுகளும் இதன்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் கலந்துகொண்டோர்
குறித்த நிகழ்வில் சிங்கப்பூர் பௌத்த சங்கத்தினர், மதத்தலைவர்கள், சுகாதார பரிசோதகர்கள், பாடசாலை மாணவர்கள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |