மன்னார் ஊடகவியலாளர் ஒருவர் வெளியிட்ட நூலை பெற்ற நிறுவனம்
மன்னார் - மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சிரேஷ்ட பிரஜைகளின் நலன் சார்ந்து செயற்பட்டு வரும் 'மெதோடிஸ் சர்ச் டெவ்லிங்' நிறுவனம் மன்னார் ஊடகவியலாளர் எஸ்.ஜெகன் எழுதி வெளியீடு செய்த மகாவம்ச விஜயனும் மன்னார் கட்டுக்கரை பிரதேசமும் என்னும் வரலாற்று ஆய்வு நூலில் ஒரு தொகுதி நுலினை பெற்றுக் கொண்டுள்ளனர்.
மாந்தை - மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சிரேஷ்ட பிரஜைகளின் வாசிப்பு திறனை மேம்படுத்தும் வகையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கு வழங்கும் நோக்கில் குறித்த நூல் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
வாசிப்பு திறன்
மேலும், அப்பகுதி பிரதேச செயலாளர் க.டெ. அரவிந்தராஜ் முன்னிலையில் இன்றைய தினம் (22) காலை 10.30 மணியளவில் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் வைத்து குறித்த நிறுவனத்தின் மன்னார் மாவட்ட பணிப்பாளர் எஸ்.என்.நிமால் பெற்றுக் கொண்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |