புத்தளத்தில் 2023ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் (Photos)
2023ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராகவும், தேசிய வள விற்பனைக்கு எதிராகவும், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் சம்பளம் அதிகரித்துத் தருமாறு கோரி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்
இந்த ஆர்ப்பாட்டம் நேற்று (06.12.2022) புத்தளம் பேருந்து நிலையத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணிலின் அரசாங்கத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறும், பதாதைகளை ஏந்தியவாறும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புத்தள மாவட்ட தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.