வடக்கில் விசனத்தை ஏற்படுத்தியுள்ள பௌத்தமயமாக்கல் சுவரொட்டிகள்!
வடக்கு கிழக்கு பகுதிகளில் பெளத்த சாசனத்தைப் பாதுகாத்தலும், பேணி வளர்த்தலும் அரசின் கடமையாக இருத்தலும் வேண்டும் NPP ஆதரவு அணி – என்ற உரிமத்துடன் சுவரொட்டிகள் காணப்படுகிறன.
குறித்த சுவரொட்டிகள் யாழ்ப்பாணம் தென்மராட்சிப் பகுதிகளின் கிராமங்கள் தோறும் ஒட்டப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
பௌத்தமயமாக்கல்
இந்நிலையில் தமிழர் பகுதிகளில் பௌத்தமயமாக்கலை முன்னிறுத்தி ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகள் தொடர்பில் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
பௌத்த பிக்கு ஒருவரிடம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆசி பெரும் வகையிலான புகைப்பட்ங்கள் இதில் காணப்படுகின்றன.
இந்நிலையில் இவ்வாறு அடையாளம் தெரியதாக நபர்களால் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமை தொடர்பில் அதிக கேள்விகள் எழுந்துள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNELஇல் இணையுங்கள் JOIN NOW |