ராஜபக்ச குடும்பத்திற்கெதிராக குரல் கொடுத்த பௌத்த பிக்கு கைது
ஹம்பாந்தோட்டைப் பிரதேசத்தில் ராஜபக்ச குடும்பத்துக்கு எதிராக தீவிரமாக குரல் கொடுத்து வந்த பௌத்த பிக்கு ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேகந்தவில ராஹுல ஹிமி எனும் பௌத்த பிக்குவே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு கோட்டா கோ கம போராட்டக்களத்தில் மாத்திரமன்றி ஹம்பாந்தோட்டையிலும் இவர் ராஜபக்ச தரப்புக்கு எதிரான போராட்டங்களில் தீவிரமாக பங்குபற்றியிருந்தார்.
அத்துடன் ராஜபக்ச அரசாங்கத்தின் சுற்றாடலுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் சூழல் , காடழிப்பு விடயங்களுக்கு எதிராகவும் கடுமையாக கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று மாலை வேகந்த ராஹுல ஹிமி வீரகெட்டிய பொலிஸாரினால் வன்முறைகளைத் தூண்டிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

யாழ்.மண்ணில் சாத்தான் அநுரகுமார திசாநாயக்க ஓதும் வேதம் 19 மணி நேரம் முன்

மனைவியை விட்டுவிட்டு உக்ரைன் அழகியுடன் ஓட்டம் பிடித்த பிரித்தானியர்... நாடுகடத்த விரும்பும் மக்கள் News Lankasri
