ஒற்றுமையை வலியுறுத்தி யாழில் பௌத்த மத குரு செய்த முன்மாதிரியான செயல்(Video)
யாழ்ப்பாணம் ஆரியகுளம் ஸ்ரீ
நாகவிகாரையிலிருந்து தெய்வேந்திர முனைவரை பௌத்த சின்னத்தை தாங்கியவாறு வெலிமட சதானந்த தேரர், கால்
நடையாக நடை பயணம் ஒன்றை இன்று ஆரம்பித்துள்ளார்.
நாட்டில் சமாதானம் ஒற்றுமையினை வலியுறுத்தி நடைபயணத்தை ஆரம்பித்துள்ளதாகவும் தனது தூரநோக்கமானசெயற்பாட்டிற்கு அனைத்து மக்களும் ஆதரவினை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
நிரந்தர சமாதானத்துடன் வாழ வேண்டும்
நாட்டில் வாழுகின்ற அனைத்து இன மக்களும் குல,மத,பேதம் இன்றி ஒற்றுமையாகவும்
நிரந்தர சமாதானத்துடன் வாழ வேண்டி பிரார்த்தித்து இன்று காலை நயினா தீவு ஸ்ரீ
நாக விஹாரையில் வழிபாடுகளை மேற்கொண்டு ஆரியகுளம் நாக விகாரையில் இருந்து
இலங்கையில் உள்ள அனைத்து பிரதேசங்களுக்கும் சென்று தெய்வேந்திர முனையில் தனது
நடை பயணத்தை நிறைவு செய்ய வுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சரிகமப Li’l Champs சீசன் 4ல் வெற்றிப்பெற்றவர்களுக்கு கிடைத்த பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? Cineulagam
