திருகோணமலையில் புதிதாக குடியேறும் தாய்லாந்து புத்தர்: தீவிர ஏற்பாடுகள் முன்னெடுப்பு
திருகோணமலை நகரில் நெல்சன் திரையரங்குக்கு முன்னால் தொல்பொருள் திணைக்களம் ஆக்கிரமித்துள்ள இடத்தில் 4 அடி உயரமான புத்தர் சிலையொன்று வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
இந்நிகழ்வில் நாளைமறுதினம் (14.05.2023) தாய்லாந்தில் இருந்து புத்தர் சிலை கொண்டுவரப்படுவதோடு 50
பிக்குகளும் பங்கேற்கவுள்ளனர்.
2,700 ஆண்டுகளுக்கு முன் தாய்லாந்திலிருந்து திருகோணமலைக்கு வந்து இறங்கியதாக கூறப்படும் பிக்குகளை நினைவுகூரும் முகமாகவும், அவர்களைக் கௌரவப்படுத்தும் முகமாகவும் அவர்கள் வந்து இறங்கியதாக மகாவம்சத்தில் கூறப்படும் திருகோணமலை நெல்சன் திரையரங்கிற்கு முன்னால் உள்ள தொல்பொருள் திணைக்களத்தால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடத்தில் இடம்பெறவுள்ளது.
தாய்லாந்து புத்தர் வருகை
தாய்லாந்திலிருந்து நாளை சனிக்கிழமை திருகோணமலைக்கு வருகை தருகின்ற 50
பிக்குகளும் நிலாவெளியில் விடுதி ஒன்றில் தங்கவுள்ளனர்.
அவர்கள் நாளைமறுதினம் (14.05.2023) காலை 7.30 மணிக்கு கடற்படைதளத்துக்குச் சென்று காந்தி சுற்றுவட்டப் பகுதியில் கடல் வழியாக வந்து இறங்கி பின்னர் பாத யாத்திரை மூலமாக நெல்சன் திரையரங்கு முன்னால் உள்ள 4 அரச மரங்கள் இருக்கின்ற இடத்துக்குச் செல்லவுள்ளனர்.
அங்கு தாய்லாந்திலிருந்து அவர்களால் கொண்டுவரப்படுகின்ற 4 அடி உயரமான புத்தர் சிலையை அவ்விடத்தில் வைத்து ஒரு மணித்தியால பிரித் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
பாதயாத்திரை
அது நிறைவு பெற்றதும் ஜெயசுமராம விகாரைக்குச் சென்று அங்கிருந்து முற்பகல் 11.30 மணியளவில் கண்டி நோக்கிய தாய்லாந்யை அவர்கள் தொடங்குவார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்த காலகட்டத்தில், 2005ஆம் ஆண்டு திருகோணமலை நகரில் புத்தர் சிலை வைக்கப்பட்டமையால் பெரும் கலவரம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW |

Siragadikka Aasai: ஆண் நண்பரை பார்க்க ஹோட்டலுக்கு சென்ற ரோகினி! மனோஜிடம் வசமாக சிக்கிய காட்சி Manithan

இந்தியாவின் BrahMos ஏவுகணையை தடுக்க ஜேர்மனியின் பாதுகாப்பு அமைப்பை வாங்கும் பாகிஸ்தான் News Lankasri

அடுத்த 10 ஆண்டுகளில் தங்கம், வெள்ளியை விட இதற்கு தான் மதிப்பு அதிகம்.., கோடீஸ்வரரின் நம்பிக்கை News Lankasri

புறப்பட்ட 5 நிமிடத்தில் விழுந்து நொறுங்கிய விமானம்: 130 உடல்கள் கருகிய நிலையில் மீட்பு News Lankasri
