அறிவியலோடு ஒத்துப்போகும் புத்தரின் தத்துவம்! - நாசாவின் இலங்கை வானியலாளர்
இலங்கை அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவது தவறு என நாசாவின் இலங்கை வானியலாளர் கலாநிதி கவன் ரத்னதுங்க தெரிவித்துள்ளார்.
இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“புத்தரின் தத்துவம் அறிவியலுடன் ஒத்துப்போகும் உலகளாவிய தத்துவமாகும். எனினும், இன்று இலங்கையில் புத்தரின் தத்துவத்தை திரித்து பலதரப்பட்ட மக்களும் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் நிலை காணப்படுகின்றது.
இந்நிலையில், இந்நாட்டின் அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்படாமல் புத்தரின் தத்துவத்திற்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். வெளி நாட்டில் புத்தரின் தத்துவத்தைப் பின்பற்றுபவர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள தயங்குவதில்லை.
சிங்கள மொழியில் தொடர்பு கொள்ளும் முன்னணி ஊடக நிறுவனங்கள் கூட சில விஞ்ஞான உண்மைகளை மக்களுக்கு வெளிப்படுத்தத் தயங்கின்றன.
கலாசாரத்தில் ஆழமாக வேரூன்றிய, குறிப்பிட்ட சிலரால் சமூகமயப்படுத்தப்பட்ட அறிவியலுக்குப் புறம்பான உண்மைகளை உள்வாங்கிய மக்களின் அச்சமும், அறிவியல் உண்மைகளை வெளிப்படுத்தச் செல்லும்போது எழும் பொது எதிர்ப்புமே இதற்குக் காரணமாகும்.
புத்தரின் இலங்கைக்கான முதல் மற்றும் இரண்டாவது பயணங்கள் குறித் ஒரு சிறப்புத் தகவலையும் அவர் இதன் போது வெளியிட்டிருந்தார்.
இதேவேளை, கலாநிதி கவன் ரத்னதுங்க ஒரு முன்னணி இயற்பியலாளர் மற்றும் வானியலாளர் ஆவார், அவர் அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் கல்வி கற்றுள்ளார்.
அத்துடன், நாசாவின் வானியலாளர்கள் குழுவில் உறுப்பினராகவும் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
