மொட்டு கட்சியும் வியத்மக அமைப்பும் கடும்போக்குவாதத்தின் உச்சத்தில்! ரணில் குற்றச்சாட்டு
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மற்றும் வியத்மக அமைப்பு என்பன கடும் போக்குவாதத்தினை உச்சத்திற்கே சென்றதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
சூம் தொழில்நுட்பம் ஊடாக ஊடகவியலாளர்களுடன் உரையாடிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தற்பொழுது இனவாத மற்றும் கடும்போக்குவாத அரசியலை மக்கள் வெறுக்கின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
இன்று விழுந்துள்ள குழியிலிருந்து எவ்வாறு மீள்வது என்பது குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மட்டுமின்றி தெற்கின் எதிர்காலத்தையும் கருத்திற்கொண்டு நீண்ட கால திட்டமொன்றை வகுக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.