கொழும்பில் இளம் பெண்களுடன் சுற்றிவளைக்கப்பட்ட விடுதி! பின்னணியில் சிக்கிய முகாமையாளர்கள்
கொழும்பு - கிரிபத்கொட பகுதியில் விடுதியொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் இயங்கி வந்த இரண்டு விடுதிகளை சுற்றிவளைத்த கிரிபத்கொட பொலிஸார் முகாமையாளர்களுடன் 5 பெண்களை கைது செய்துள்ளனர்.
மஹர நீதவான் நீதிமன்றில் பெறப்பட்ட தேடுதல் உத்தரவுக்கு அமைய பொலிஸாரால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொலிஸார் நடவடிக்கை
மசாஜ் நிலையங்களில் ஒன்று கண்டி வீதியின் கலா சந்தியிலும் மற்றைய மசாஜ் நிலையம் மாகொல வீதி பகுதியிலும் சோதனையிடப்பட்டுள்ளது.

கலா சந்தியில் உள்ள மசாஜ் நிலையத்தில் மூன்று பெண்களுடன் முகாமையாளர் ஒருவரும், மாகொல வீதி பகுதியில் உள்ள மசாஜ் நிலையத்தில் இரண்டு பெண்களுடன் முகாமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாறை, களனி மற்றும் கடவத்தை பிரதேசங்களில் வசிக்கும் 22 வயதுக்கும் 48 வயதுக்கும் இடைப்பட்ட பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam