பிரித்தானியாவில் இருந்து இலங்கை சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி
பிரித்தானிய பெண்ணின் கடன் அட்டைகளை திருடி, பல கடைகளில் இருந்து 250000 ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளத்தை சேர்ந்த 22 வயதுடைய சந்தேக நபரை நேற்று இரவு ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கண்டியிலிருந்து எல்ல பகுதிக்கு சென்ற ரயிலில் பயணித்து, ரயிலில் பயணித்த பிரித்தானிய பெண்ணின் பணப்பையிலிருந்து வங்கி அட்டைகளை திருடியுள்ளார்.
வங்கி அட்டைகள்
தனது வங்கி அட்டைகள் தொலைந்து போயுள்ளதாக எல்ல ரயில் நிலையத்தில் உள்ள சுற்றுலா பொலிஸாரிடம் பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாடு செய்துள்ளார்.

அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் திருடப்பட்ட கடன் அட்டைகளை பயன்படுத்தி ஹட்டனில் ஒரு தங்க நகை, கையடக்க தொலைபேசி மற்றும் பல ஆபரணங்கள், ஆடைகள், காலணிகள் மற்றும் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பிரித்தானிய பெண்
கொள்வனவு செய்த தங்க நகை ஹட்டன் நகரில் உள்ள ஒரு தனியார் அடகுக் கடையில் அடகு வைக்கப்பட்டு, 78,000 ரூபா பணம் பெறப்பட்டமை தெரியவந்துள்ளது.

அத்துடன் வெளிநாட்டுப் பெண்ணின் அட்டைகளை திருடிய நபர்,காரை வாடகைக்கு எடுக்க வந்திருப்பது தெரியவந்தது.
சந்தேக நபரிடம் இருந்து பிரித்தானிய பெண்ணின் காணாமல் வங்கி கடன் அட்டைகள் மற்றும் அதனைப் பயன்படுத்தி வாங்கிய பொருட்கள் மற்றும் 38,890 ரூபாய் மற்றும் இரண்டு வெளிநாட்டு நாணயத்தாள்களையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
புகைப்படங்கள்: திருமால்




முத்து மீது தவறு இல்லை என தெரிந்ததும் ரவி செய்த செயல், நீது அடித்தது யார் தெரியுமா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நியூ என்ட்ரியால் ஜனனிக்கு ஏற்படப்போவது?... வெளிவந்த புரொமோ Cineulagam
ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்ட இளம்பெண்: விவரங்கள் வெளியாகின News Lankasri
எனது நிறம் வைத்து இப்படியெல்லாம் விமர்சனம் வந்தது, ஆனால்... சீரியல் நடிகை ரேஷ்மா ஓபன் டாக் Cineulagam