பிரித்தானிய மகாராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற ரணில்! அதிருப்தி வெளியிட்டுள்ள தமிழர்கள்
அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான வன்முறை, ஒடுக்குமுறை மற்றும் அவசரகால அதிகாரங்களை பயன்படுத்துகின்றமை தொடர்பாக சர்வதேச கண்டனங்கள் அதிகரித்துள்ள நிலையில், இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானிய மகாராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்கின்றமை குறித்து பிரித்தானியாவில் உள்ள தமிழர்கள் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
ஐக்கிய நாடுகளின் அண்மைய அறிக்கை, தற்போதைய இலங்கை ஜனாதிபதியின் போக்கு மற்றும் அதிகரித்து வரும் இராணுவ மயமாக்கலின் ஆழமான கலாச்சாரம் குறித்து ஆழ்ந்த எச்சரிக்கையை எழுப்பியிருந்தது.

ரணிலின் உரைக்கு எதிராக போராட்டம்
2018ஆம் ஆண்டில் ஒக்ஸ்போர்ட் யூனியனில் உரையாற்றிய தற்போதைய ஜனாதிபதியும், அப்போதைய இலங்கை பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்த போராட்டத்தில் பிரித்தானியத் தமிழர்கள் இணைந்திருந்தனர்.
இந்த உரையின் போது அவர், ஆயுதப் போரின் போது இலங்கை இராணுவம் செய்த போர்க்குற்றங்களை சர்வதேச புலனாய்வாளர்கள் விசாரிக்க வேண்டியதன் அவசியத்திற்கு எதிராக கருத்துரைத்திருந்தார்.

இறுதிக் கட்டப் போரின் போது 169,796 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ரணிலுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு
இந்த நிலையில் 2018இல், விக்ரமசிங்கவின் வருகைக்கு எதிராக பிரித்தானியாவில் போராட்டம் நடத்தப்பட்டது. அவர் இலங்கையின் அட்டூழியங்களை வெள்ளையடிக்க மட்டுமே பணியாற்றினார். இன்று எதுவும் மாறவில்லை.
எனவே பிரித்தானிய தேசிய துக்கத்தின் இந்த காலகட்டத்தில் அவருக்கு மகாராணியைப் பார்க்கும் பாக்கியம் வழங்கப்பட்டிருக்கக் கூடாது என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் எஸ்.யோகலிங்கம் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
மற்றொரு தமிழ் ஆர்வலர் கூறுகையில், விக்ரமசிங்கவின் வருகை குறித்து தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அத்துடன் 2013இல் இலங்கையில் நடந்த பொதுநலவாய மாநாட்டில் மகாராணி கலந்து கொள்ளவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுநலவாய தலைவரான இரண்டாம் எலிசபெத், பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளாதது 40 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த சூழ்நிலையில் ரணில் விக்ரமசிங்கவின் வருகையானது நடவடிக்கைகளை சீர்குலைப்பதைத் தவிர வேறு எதையும் செய்யாது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
குணசேகரன் நெற்றியில் அதிரடியாக துப்பாக்கி வைத்த போலீஸ்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
Bigg Boss: பேபின்னு சொன்ன வாயை உடைச்சிடுவேன்... இருக்கையை எட்டி உதைத்த கம்ருதின்! பாருவின் காதல் முறிவு Manithan