ரஷ்யாவின் அணுகுமுறை தொடர்பில் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
ரஷ்யா - உக்ரைன் யுத்தத்தின் போது ரஷ்யாவில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள உக்ரைனிய மக்களை இராணுவத்தில் சேர்ப்பது சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
ரஷ்யாவில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளான கேர்சன் மற்றும் சபோரிஜியா பகுதி மக்களை ரஷ்யா கட்டாயப்படுத்தியதாக உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்த கருத்துக்குப் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு இவ்வாறு தெரிவித்துள்ளது.
சர்வதேச சட்டத்திற்கு அமைவாக, அதிகாரத்தைப் பயன்படுத்தி பொதுமக்களை இராணுவத்தில் சிப்பாய்களாக பணியாற்றக் கட்டாயப்படுத்துவது சட்டவிரோதமானது என அவ்வமைச்சு வலியுறுத்தியுள்ளது.