இலங்கை வந்த பிரித்தானிய பிரஜையினால் ஏற்பட்டுள்ள குழப்பம்: பொலிஸார் விசாரணை
இலங்கை வந்த பிரித்தானிய பிரஜையொருவர் செய்த பொய்யான முறைப்பாடு தொடர்பில் அலவத்துகொட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பிரித்தானிய பிரஜையொருவர் அலவத்துகொடையில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்துள்ளார்.
இதன்போது அவர் தங்கியிருந்த அறையின் கதவுகள் உடைக்கப்பட்டு அங்கிருந்த சுமார் 5 இலட்சம் ரூபா பெறுமதியான பணம் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொருட்கள் திருட்டு
90,000 ரூபா பணம், 2 கைக்கடிகாரங்கள், கமரா ஆகியவை திருடப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்த நிலையில், சந்தேகத்திற்குரிய பிரித்தானிய பிரஜை விசாரணைகள் தேவையற்றது எனவும், காப்புறுதி இழப்பீடு பெறுவதற்கு ஆவணம் ஒன்று போதுமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது பிரித்தானிய பிரஜையின் வாக்குமூலத்தில் சந்தேகமடைந்த பொலிஸார், மேலதிக விசாரணைகளின் போது, அறையின் கதவுகள் உள்ளே இருந்து உடைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.

பொலிஸார் விசாரணை
இதனைத்தொடர்ந்து, சந்தேகத்திற்கிடமான வெளிநாட்டவர் பொலிஸாரை தவிர்த்துவிட்டு அப்பகுதியில் இருந்து தப்பிச்சென்றுள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அலவத்துகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 21 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan