பிரித்தானியர்கள் கோடை கால விடுமுறையை வெளிநாடுகளில் செலவிடலாம்! - அரசு அறிவிப்பு
பிரித்தானிய மக்கள் கோடை கால விடுமுறையை வெளிநாடுகளில் செலவிடுவதைப் பற்றிச் சிந்திக்கலாம் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸ் தெரிவித்துள்ளார்.
அந்நாட்டு ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“நீங்கள் உங்கள் கோடை விடுமுறையை வெளிநாடுகளில் செலவழிக்க டிக்கெட்டுகளை ஒப்பந்தம் செய்யாதீர்கள் என்று கூறமாட்டேன். நீங்கள் உங்கள் விடுமுறையை வெளிநாடுகளில் செலவழிப்பதைப் பற்றிச் சிந்திக்கலாம்.
எனினும் மக்களுக்கு கோவிட் - 19 தொற்றின் ஆபத்து குறித்து தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால், நாங்கள் இதில் எச்சரிக்கையாக இருப்போம்.
வெளிநாடுகளில் இருந்து வருபவர்களால் கோவிட் தொற்று பரவுவதை நாங்கள் விரும்பவில்லை” என்று தெரிவித்தார்.
இதேவேளை, கோவிட் - 19 தடுப்பூசி செலுத்துவதைத் தீவிரப்படுத்தியதைத் தொடர்ந்து பிரித்தானியாவில் கோவிட் - 19 தொற்று விகிதம் குறைந்துள்ளது.
பிரித்தானியாவில் கடந்த சில வாரங்களாக 5,000க்கும் குறைவானவர்களே நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரித்தானியாவில் 60 வீதம் கோவிட் - 19 தொற்று குறைந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
கோவிட் - 19 தொற்றுப் பரவல் குறைந்துள்ளதன் காரணமாக பிரித்தானியாவில் அடுத்த வாரம் முதல் தளர்வுகள் அமல்படுத்தப்பட உள்ளன.
உலகம் முழுவதும் கோவிட் - 19 பரவல் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளிலும் கோவிட் - 19 தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சுமார் 13 கோடிக்கும் அதிகமானோர் உலகம் முழுவதும் கோவிட் - 19 பரவலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 10 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்