இலங்கையில் வீடு வாங்க காத்திருந்த பிரித்தானியருக்கு ஏற்பட்ட நிலை
பிரித்தானிய பிரஜை ஒருவருக்கு அளுத்கமவில் வீடொன்றை காண்பித்து அதனை பெற்றுத் தருவதாக கூறி ஏமாற்றிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதற்கமைய, 15.5 மில்லியன் ரூபாவை மோசடி செய்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரித்தானிய பிரஜை செய்த முறைப்பாட்டிற்கமைய, அளுத்கம களுவாமோதர பிரதேசத்தில் வசிக்கும் 57 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சந்தேகநபர் வீட்டைக் காட்டி, வீட்டைக் கொடுக்காமல் பணத்தைப் பெற்றுக்கொண்டு நிதி மோசடி செய்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிடுகின்றனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் நீண்ட விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri