உக்ரைனுக்கு உதவிய பிரித்தானிய சிறுவனின் புதிய முயற்சி
பிரித்தானியாவை சேர்ந்த 13 வயது சிறுவன் கிழக்கு ஆபிரிக்காவின் குழந்தைகளுக்கு உதவ புதிய நிதி திரட்டலை தொடங்கியுள்ளார்.
கேப்ரியல் கிளார்க் (Gabriel Clark) என்ற சிறுவன் கடந்த ஆண்டு "Bowl for Ukraine" என்ற பெயரில் எடுத்த முயற்சி மூலம் உக்ரைனிய குழந்தைகளுக்காக 250,000 யூரோக்கள் திரட்டியதற்காக இணையத்தில் வைரலாகியிருந்தார்.
இந்த முயற்சியின் கீழ், கிளார்க் ஒரு மரக் கிண்ணத்தை செதுக்கி அதில் உக்ரைனிய கொடியின் வண்ணங்கள் பொறித்தார். கிளார்க் இந்த கிண்ணங்களை ஏலத்தில் விட்டார்.
இதன் மூலம் போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் நாட்டின் குழந்தைகளுக்காக 250,000 யூரோக்கள் திரட்டினார்.
சிறுவனின் புதிய முயற்சி
இந்நிலையில் இந்த ஆண்டு, 'The Hope Bowl' என்ற மற்றொரு கிண்ணத்தை உருவாக்க முடிவு செய்துள்ளார்.
கிளார்க் இந்த புதிய கிண்ணத்தை உருவாக்க 10 மணிநேரத்தை எடுத்துக்கொண்டார்.
கிழக்கு ஆபிரிக்காவில் போராடி வரும் குழந்தைகளுக்கு ஆதரவாக குழந்தைகளுக்கான அவசர நிதியத்திற்காக பணத்தை திரட்ட கிளார்க் திட்டமிட்டுள்ளார்.
கிளார்க் தனது கடைசி நிதி திரட்டலின் வெற்றியாலும், போலந்தில் உள்ள ஒரு பாடசாலையில் குழந்தைகளுக்கு இது எவ்வாறு உதவியது என்பதாலும் இந்த முயற்சியை எடுக்க தூண்டப்பட்டார்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

சிந்துநதி நீர் நிறுத்தத்தால்.., பாகிஸ்தான் நடிகைக்கு தண்ணீர் போத்தல்களை அனுப்பிய இந்திய ரசிகர் News Lankasri

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan

இந்தியாவின் மிகவும் படித்த அரசியல்வாதி.., ஐஏஎஸ் வேலையை விட்டுவிட்டு இளம் வயதிலேயே இறந்த நபர் யார்? News Lankasri
