புலம்பெயர்ந்தோரின் வங்கிக்கணக்குகளுக்கு ஆபத்து!பிரித்தானிய அரசு அதிரடி
பிரித்தானியா, நீண்ட காலமாகவே சட்டவிரோத புலம்பெயர்தலையும் பிரித்தானியாவுக்கு சட்ட விரோதமாக புலம்பெயர்ந்தவர்கள் வேலை செய்வதையும் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகிறது.
இந்நிலையில் பிரித்தானியாவில் சட்டவிரோதமாக வாழ்பவர்கள் என சந்தேகிக்கப்படும் புலம்பெயர்ந்தோரின் வங்கிக்கணக்குகள் மூடப்படும் நிலை உருவாகியுள்ளது.
இதற்கமைய வங்கி ஊழியர்கள் நேரடியாக தங்கள் வாடிக்கையாளர்களின் ஆவணங்களையோ அவர்களுடைய புலம்பெயர்தல் நிலையையோ சோதிக்கமாட்டார்கள்.

கணக்குகளை சோதிக்கும் நடவடிக்கை
அதற்கு பதிலாக, உள்துறை அலுவலகம், பிரித்தானியாவிலுள்ள வங்கியில் கணக்கு வைக்க தகுதியற்றவர்கள் என கருதப்படுவோர் குறித்த விபரங்களை பகிர்ந்துகொள்ளும்.
அதைத்தொடர்ந்து உள்துறை அலுவலகம், குறிப்பிட்ட வாடிக்கையாளர் பிரித்தானியாவில் அனுமதியின்றி தங்கியிருக்கிறாரா என்பதை உறுதி செய்ய, மேலும் ஒரு சோதனையை நடத்தும்.
சோதனையில், அப்படி அவர் பிரித்தானியாவில் அனுமதியின்றி தங்கியிருக்கிறார் என்பது உறுதியாகும் நிலையில், அவரது வங்கிக்கணக்கு மூடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri