நாட்டில் கையூட்டல் பெற்றுக்கொள்ளும் சம்பவங்கள் அதிகரிப்பு
நாட்டின் அரச அதிகரிரகள் கையூட்டல் பெற்றுக் கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கையூட்டல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
அரசாங்க நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கூட்டாக இணைந்து கையூட்டல் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பெற்றுக்கொள்ளப்படும் கையூட்டல் தொகையை அனைவரும் பகிர்ந்து கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
கையூட்டல் பெற்றுக் கொள்ளல் பாரதூரமான குற்றம் எனவும் இவ்வாறு கையூட்டல் கொடுக்கும் நபர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இவ்வாறானவர்கள் தொடர்பில் தீவிர கண்காணிப்பு நடத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகம் ஒருவர் உள்ளிட்ட மூவர் 41 லட்சம் கையூட்டல் பெற்றுக்கொண்ட சம்பவம் தொடர்பிலான ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam