திரும்பப் பெற்ற வழக்குகளை மீண்டும் தொடரும் லஞ்ச ஆணைக்குழு
இலஞ்சம் மற்றும் விசாரணை ஆணைக்குழுவினால் கடந்த காலத்தில் தொடரப்பட்டு, தொழினுட்ப பிரச்சினை காரணமாகத் திரும்பப் பெறப்பட்ட 20 வழக்குகளில் 10 வழக்குகள் மீண்டும் தொடரப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஏனைய வழக்குகளையும் மீண்டும் தொடர்வது தொடர்பாக ஆணைக்குழுவின் சட்டப் பிரிவு ஆராய்ந்து வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு, அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் பலருக்கு எதிராகத் தாக்கல் செய்திருந்த வழக்குகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டது.
ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்களின் கையெழுத்துக்களும் இல்லாமல் வழக்கைத் தாக்கல் செய்யக்கூடாது என உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைய அந்த வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri
மருத்துவமனைக்கு வந்த நந்தினி, ரேணுகா பார்த்த ஷாக்கிங் விஷயம், கெஞ்சும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam