இலங்கையில் எட்டு பெண்களில் ஒருவருக்கு மார்பக புற்றுநோய் - ஹசந்தி ஜயலத்
இலங்கையில் எட்டு பெண்களில் ஒருவருக்கு மார்பக புற்றுநோய் இருப்பதாக புற்று நோய் தொடர்பான விசேட மருத்துவ நிபுணர் ஹசந்தி ஜயலத் (Hasanthi Jayalath) தெரிவித்துள்ளார்.
சுகாதார ஊக்குவிப்பு பணியகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
இலங்கை பெண்களில் 27 வீதமானவர்களுக்கு மார்பக புற்று நோய் ஏற்பட்டுள்ளதுடன் புதிய புள்ளிவிபரங்களின் படி மார்பக புற்று நோயுடன் கூடிய 4 ஆயிரத்து 500 பெண்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
45 வயது முதல் 65 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கே அதிகளவில் மார்பக புற்றுநோய் ஏற்படுகிறது.
இது சத வீதத்தின் அடிப்படையில் 100க்கு 70 வீதமாகும் எனவும் ஹசந்தி ஜயலத் தெரிவித்துள்ளார்.