நுரைச்சோலை அனல் மின் நிலைய இயந்திர கட்டமைப்பில் கோளாறு
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மூன்றாம் மின் உற்பத்தி இயந்திர கட்டமைப்பில் ஏப்ரல் மாதத்தில் பெரும் பழுதுபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்படவிருந்த நிலையில், அது தற்போது செயலிழந்துள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
இயந்திர கட்டமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தகவலை எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர டுவிட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.
CEB has informed of a breakdown in unit 3 of Norochcholai power plant. Unit 3 was due to undergo major overhaul maintenance in April. To ensure an uninterrupted power supply, CEB owned Diesel & Fuel Oil Power plants will be used. There will be No power cuts due to the breakdown.
— Kanchana Wijesekera (@kanchana_wij) March 19, 2023
இலங்கை மின்சார சபை நடவடிக்கை
தடையில்லா மின்சாரத்தை வழங்குவதற்காக, இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான டீசல் மற்றும் எரிபொருள் ஆகியவை மின் நிலையங்களில் பயன்படுத்தபடவுள்ளமையினால் மின்வெட்டு இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
