பிராண்டிக்ஸ் மீது நிபந்தனைகளை விதிக்குமாறு உலக வங்கியிடம் கோரிக்கை

coronavirus brandix worldbank
By Independent Writer Apr 13, 2021 03:34 PM GMT
Independent Writer

Independent Writer

in இலங்கை
Report

கோவிட் தொற்றுநோய் அச்சுறுத்தலின் போது தொழிலாளர்களை ஆபத்தில் ஆழ்த்திய பிராண்டிக்ஸுக்கு கடன் வழங்கப்படுமாயின், தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நிபந்தனைகளை விதிக்குமாறு உலக வங்கி விடுத்த வேண்டுகோளுக்குச் சாதகமான பதில் கிடைத்துள்ளதாகத் தொழிற்சங்கத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியம் தற்போது பிராண்டிக்ஸுக்கு 50 மில்லியன் டொலர் கடனை வழங்குவது குறித்துப் பரிசீலித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள இலங்கை வர்த்தகம், தொழில்துறை மற்றும் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் பிரதான மண்டபத்தில் ஏப்ரல் 8 வியாழக்கிழமை நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் நாட்டின் முன்னணி தொழிற்சங்கங்கள் இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளன.

பிராண்டிக்ஸ் நிறுவனத்திற்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளின் ஒரு பகுதியாக, தொழிற்சங்க சுதந்திரத்திற்கான உரிமையை உறுதி செய்வதோடு, சுகாதார பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சுற்றுச்சூழல் மற்றும் சமூக திட்டத்தை ஏற்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளதாகச் சுதந்திர வர்த்தக வலைய தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இந்த வருடம் மார்ச் மாத இறுதியில் ஏற்பட்ட கோவிட் பரவலுக்கு நிறுவனமே காரணம் எனக் குற்றம் சாட்டி, உலக வங்கிக் குழுமத்தின் ஒரு பகுதியான சர்வதேச நாணய நிதியத்தில் தொழிற்சங்கங்கள் முறைப்பாடு செய்திருந்தன.

தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க பிராண்டிக்ஸின் தற்போதைய திட்டம் போதுமானதாக இல்லையெனத் தொழிற்சங்கத் தலைவர்கள் சர்வதேச நாணய நிதியத்திடம் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

"நாங்கள் பணியிடத்தின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு குறித்து மாத்திரம் கவலைப்படவில்லை. தொழிற்சங்கங்களில் சேர்வதற்கான உரிமையைப் பாதுகாப்பதும் முக்கியம். கோவிட் ஆலோசனைகளை மீறியமை குறித்து தொழிலாளர்கள் முறைப்பாடு செய்ய இயலாமை பிராண்டிக்ஸ் கோவிட் பரவலுக்கு நேரடியாகப் பங்களித்தது.

இது சர்வதேச தொழிலாளர் அமைப்பின் சி 87 மற்றும் சி 98 இல் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதில் பிராண்டிக்ஸ் நிர்வாகத்தின் ஈடுபாட்டைப் பற்றி கடுமையான கேள்விகளை எழுப்புகிறது.”

தமது பிரச்சினைகள் தொடர்பில் கரிசனை கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியம், இந்த கடன் மதிப்பீட்டில் எழுப்பப்பட்ட பிரச்சினைகள் குறித்து அவதானம் செலுத்துவதாகப் பதிலளித்துள்ளதாகத் தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன. "இந்த கடனைப் பற்றி விவாதிப்பதற்கான ஆரம்ப திட்டமிடப்பட்ட திகதியை நாணய நிதியம் ஒத்திவைத்துள்ளது."

பிராண்டிக்ஸுக்கு கடன்களை வழங்கும்போது தொழிலாளர்களின் உரிமைகள் முழுமையாக மதிக்கப்படுவதைச் சர்வதேச நாணய நிதியம் உறுதி செய்ய வேண்டும் என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர வர்த்தக வலைய தொழிற்சங்கங்கள் சர்வதேச நாணய நிதியத்தின் மூன்று அடிப்படை கோரிக்கைகளை முன்வைத்துள்ளன.

01. ஊழியர்கள் மீது இந்த விரிவாக்கத்தின் குறிப்பிட்ட தாக்கங்களை ஆராய்ந்து அவர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்துதல்.

02. கையொப்பமிடப்பட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர் அமைப்புகளுடன் விவாதங்களை வெற்றிகரமாகவும் நல்ல நம்பிக்கையுடனும் தொடருதல்.

03. கடனைப் பெற்றுக்கொள்ள அதன் சுற்றுச்சூழல் மற்றும் சமூக செயல் திட்டத்தைத் திருத்துதல், தொழிலாளர் உரிமைகள் தொடர்பான செயல்திறன் தரம் 2ற்கு இணங்க உடல்நலம், பாதுகாப்பு மற்றும் பணியிடத்தில் கூட்டுறவு சுதந்திரம் ஆகியவற்றை உறுதி செய்தல்.

வியர்வை துளிகள் கூட்டமைப்பு, மனித விடுதலைக்கான அபிவிருத்தி அமைப்பு, இலங்கை வர்த்தக மற்றும் தொழில்துறை ஒன்றியம், வர்த்தக கைத்தொழில் தொழிலாளர் சங்கம் மற்றும் கப்பல் ஏற்றுமதியாளர் தேசிய ஒன்றியம் ஆகியன இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளன.

ஆறு மாதங்களுக்கு முன்னர், இலங்கையில் கோவிட் தொற்றுநோயின் இரண்டாவது அலை ஆரம்பமானது. மினுவாங்கொடையில் உள்ள பிராண்டிக்ஸ் தொழிற்சாலையின் 1,400 ஊழியர்களில் 1,000ற்கும் மேற்பட்டவர்களுக்குத் தொற்று ஏற்பட்டது. சுகாதார மற்றும் பாதுகாப்பு அமைப்பின் குறைபாடுகள் குறித்து ஒரு சுயாதீன விசாரணையை ஆரம்பிப்பதாகவும், சுயாதீனமான மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழு இதற்கென நியமிக்கப்பட்டுள்ளதாகவும், கண்டுபிடிப்புகள் மற்றும் அவதானிப்புகள் பகிரங்கப்படுத்தப்படும் எனவும், கடந்த வருடம் ஒக்டோபர் 19ஆம் திகதி பிராண்டிக்ஸ் தெரிவித்திருந்ததாகவும், எனினும் அறிவிப்பு வெளியாகி சுமார் ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையில் அதுத் தொடர்பில் எவ்வித முன்னேற்றமும் இல்லை எனவும் தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.

பிராண்டிக்ஸ் கோவிட் பரவல் ஆடைத் தொழிலாளர்களை நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளதாகவும், நாட்டின் பொருளாதாரத்தைத் தக்கவைக்கும் ஆடைத்துறை ஒவ்வொரு நாளும் ஆபத்தில் உள்ளதாகவும் தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

ஊழியர்கள் விடுக்கும் அபாயங்களைப் புறக்கணிப்பதாக பிராண்டிக்ஸ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

செப்டம்பர் 2020 இல் கோவிட் பரவலுக்கு முன்னர், கோவிட் அறிகுறிகள் மற்றும் தனிமைப்படுத்தல் கோரிக்கைகளை முன்வைத்த தொழிலாளர்களை அவமதித்தமை, அவர்களின் கருத்திற்குச் செவி சாய்க்காமை, தொற்று அறிகுறி காணப்பட்டவர்களைத் தொடர்ந்து பணிக்கு சமூகமாக்குமாறு பணித்தமை, உதாரணமாக உணவகத்தில் காணப்பட்ட சுகாதார வசதிகளை அகற்றியமை, கோவிட் தொற்று எச்சரிக்கைகளைப் புறந்தள்ளி 1,400 தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு விருந்து வைத்தமை, விடுதிகளின் சமூக இடைவெளியை எளிதாக்குவதற்கு அல்லது மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க நிறுவனம் தவறியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் பிராண்டிக்ஸ் ஊழியர்களால் நிறுவனத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

05 Jul, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, Markham, Canada

30 Jun, 2025
மரண அறிவித்தல்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், கொழும்பு, Vaughan, Canada

02 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Philippines, Tanzania, Toronto, Canada

01 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, பிரான்ஸ், France

06 Jul, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், அச்சுவேலி, கொழும்பு

07 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கன்னாதிட்டி, பரந்தன்

06 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கச்சேரி கிழக்கு, Vancouver, Canada

30 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, கொழும்பு, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, சூரிச், Switzerland

05 Jul, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுன்னாகம், London, United Kingdom

26 Jun, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Paris, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

நவாலி, அளவெட்டி, கொழும்பு

05 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கொழும்பு

05 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Bussolengo, Italy

17 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, Hamburg, Germany

28 Jun, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, மானிப்பாய்

06 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US