பிரித்தானியாவில் தீவிரம் பெறும் சிறுவர்கள் மீதான கத்திக்குத்து தாக்குதல்கள்
பிரித்தானியாவில் 13 வயது சிறுவன் கத்திக்குத்து தாக்குதலில் கொல்லப்பட்ட நிலையில் பொலிஸார் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இதன்போது சம்பவ இடத்திற்கு Oldbury-வின் West Midlands சந்தை நகரத்தில் Lovett Avenue பகுதியில் உள்ள வீட்டிற்கு பொலிஸார் மாலை 4 மணியளவில் அழைக்கப்பட்டுள்ளனர்.
புலனாய்வு பிரிவு
இந்நிலையிவ் மருத்துவ குழுவினர் தேவையான சிகிச்சை வழங்கியும் குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.
மேலும், புலனாய்வு அதிகாரிகள் குழு விசாரணையை நடத்தி வருவதாக வெஸ்ட் மிட்லேண்ட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து புலனாய்வு பிரிவு கண்காணிப்பாளர் ஷான் எட்வர்ட்ஸ் (Shaun Edwards) , இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை விரைவில் கைது செய்வதற்கான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.
அத்துடன் எங்களின் சிறப்பு அதிகாரிகள் சிறுவனின் குடும்பத்திற்கு ஆறுதல் வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: ரெட் கார்டு குறித்து ஏன் கேட்கக்கூடாது? சான்ட்ராவின் நடிப்பை அம்பலப்படுத்திய போட்டியாளர்கள் Manithan
3ஆம் உலக போரின் தொடக்கமா? அணுகுண்டு வீச தயாராகும் ஈரான்; கிரீன்லாந்திற்கு அடம்பிடிக்கும் டிரம்ப் News Lankasri