சிறுமிக்கு காதலனால் நேர்ந்த கதி - இளைஞன் மற்றும் தம்பதி கைது
மொனராகல, வெல்லவாய பகுதியில் 15 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இளைஞனும், அவருக்கு ஆதரவளித்த தம்பதியும் நேற்று முன்தினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர் சிறுமியுடன் காதல் உறவில் இருந்ததாகவும், கடந்த வருடம் 7ஆம் மாதம் சிறுமியை அவரது வீட்டிலிருந்து வெளியே அழைத்துச் சென்று விடுதியொன்றில் தங்க வைத்துள்ளார்.
இதன்போது கணவன்-மனைவி போல நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் விடுதியில் இருந்து சிறுமியை தனது பகுதியிலுள்ள வீடொன்றில் தங்க வைத்துள்ளார்.
கணவன்-மனைவி
அவர்கள் வீட்டிலும் கணவன்-மனைவி போல நடந்து கொண்டனர். இதற்கு அந்தப் பகுதியிலுள்ள தம்பதியின் ஆதரவும் கிடைத்துள்ளது.

இந்நிலையில் கடந்த 7ஆம் திகதியன்று இரவு சிறுமி தனது வீட்டிற்குத் திரும்பினார். அங்கு சிறுமியின் தாய் சிறுமியை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று சம்பவம் குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
அதற்கமைய, சந்தேக நபரையும் முறையற்ற உறவுக்கு ஆதரவளித்து தங்கவைத்த தம்பதியையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வெல்லவாய ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர்கள் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.