தென்னிலங்கையில் பெண் ஊழியர்கள் கழிப்பறைக்கு செல்வதை வீடியோ எடுத்த இளைஞன்
பாணந்துறையில் நிதி நிறுவனம் ஒன்றின் அலுவலகத்தில் பெண்கள் கழிப்பறைக்கு செல்வதை படமெடுத்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் மத்துகம, நவுத்துடுவ பகுதியை சேர்ந்த 26 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் அதே அலுவலகத்தின் ஊழியராகும். நேற்று முன்தினம் கழிப்பறைக்கு சென்றபோது சந்தேக நபர் தனது கையடக்க தொலைபேசியில் வீடியோ எடுப்பதைக் கண்ட பெண் ஊழியர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.
கையடக்க தொலைபேசி
இந்த விடயம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ள பாணந்துறை தெற்கு பொலிஸார், சந்தேக நபரின் கையடக்க தொலைபேசியை ஆய்வு செய்தனர்.

இதன்போது, அவர் சிறிது காலமாக பெண்கள் கழிப்பறைக்குச் செல்லும் வீடியோக்களைப் பதிவு செய்து வருவது கண்டறியப்பட்டதாக கூறியுள்ளார்.
சந்தேக நபரை பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அவரது இரத்தத்திற்குப் பழிவாங்குவது உறுதி: தந்தையின் இறுதிச்சடங்கில் மொஜ்தபா கமேனி உருக்கம் News Lankasri