நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு சஜித் தரப்பில் இருவர் எதிராக வாக்களிப்பர் – மஹிந்தானந்த
நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிராக வாக்களிப்பாளர்கள் என அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக இன்றைய தினம் நாடாளுமன்றில் நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த வாக்கெடுப்பில் சஜித் தரப்பினைச் சேர்ந்த ஒருவர் அல்லது இரண்டு பேர் கம்மன்பிலவிற்கு சார்பாக வாக்களிப்பர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
155 வாக்குகளுக்கு கூடுதலான தொகை வாக்குகள் கிடைக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் ஊடாக அரசாங்கத்திற்குள் பிளவு ஏற்படும் எதிர்பார்த்தது எனவும், மக்களின் நலன்களை கருத்திற் கொண்டு அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam