பிரான்சில் 20 பாடசாலைகளுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்: திடீரென வெளியேற்றப்பட்ட மாணவர்கள்
பிரான்ஸ் தலைநகர் பரீஸிலுள்ள 20 யூத பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த மிரட்டலானது நேற்று(30.10.2023) விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பரீஸில் உள்ள 20 யூத பாடசாலைகளில் வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறும் என அநாவசிய தொலைபேசி அழைப்பு ஒன்று வந்ததைத் தொடர்ந்து, பொலிஸார் வெடிகுண்டு நிபுணர்களுடன் அந்த பாடசாலைகளில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
வெடிப்பொருட்கள்
வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து மாணவர்கள் பாடசாலைகளிலிருந்து வெளியேற்றப்பட்டதோடு தங்கள் பிள்ளைகளை உடனடியாக வீட்டுக்கு அழைத்துச் செல்ல பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், எந்த பாடசாலையிலும் இதுவரை வெடிப்பொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam
