கொழும்பிலிருந்து சென்ற பேருந்துக்கு வெடிகுண்டு மிரட்டல் - பொலிஸார் அதிரடி சோதனை
கொழும்பிலிருந்து மொரட்டுவை நோக்கிச்செல்லும் தனியார் பேருந்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த அநாமதேய தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து, பேருந்து நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேகத்திற்குரிய பொருள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் கல்கிசை தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணைகள் தீவிரம்
கொழும்பிலிருந்து மொரட்டுவை நோக்கிச் செல்லும் பேருந்தில் வெடிகுண்டு இருப்பதாக 119 அவசர எண் மூலம் திங்கட்கிழமை (05) பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதற்கமைய, கல்கிசை போக்குவரத்து பிரிவு பொலிஸார் கடுபெத்த வீதித் தடைக்கு அருகில் பேருந்தை நிறுத்தி முழுமையான சோதனைக்கு உட்படுத்தியதுடன் சந்தேகத்திற்குரிய எதுவும் கிடைக்கவில்லை என வும் தெரிவித்தனர்.
இது மிரட்டல் நடவடிக்கையா அல்லது குற்றம் செய்வதற்கான திட்டமா என்பது குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட நபரைக் கைது செய்ய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.