வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்பு: மட்டக்களப்பில் சம்பவம்
மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை கற்சேனை பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கொக்கட்டிச்சோலை பகுதியில் 41 வயது மதிக்கத்தக்கக் குடும்பஸ்தர் ஒருவரே இன்று வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்டவர் முருகப்பன் லோகிதன் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.