கல்முனையில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுவன் : குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்ட சடலம்
கல்முனை சீர்திருத்த பாடசாலையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள 15 வயது சிறுவனின் சடலம் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 17ஆம் திகதி மணி ஒன்றை திருடியதற்காக குறித்த சிறுவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சீர்திருத்த பாடசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
விசாரணை முடிவுகள்
தொடர்ந்து கடந்த மாதம் 29ஆம் திகதி அதிகாலை 3.30 மணியளவில் குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளதாக சிறுவனின் குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் தனது மகன் காயங்களுடன் உயிரிழந்துள்ளதாக மரணமடைந்தவரின் தந்தை தெரிவித்திருந்தார்.
இதேவேளை, உயிரிழந்த சிறுவன் கொலை செய்யப்பட்டுள்ளதாக உடற்கூற்று பரிசோதனை மூலம் தெரியவந்ததுள்ளது என சிறுவனின் தந்தைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
