தென்கொரிய கடலில் படகு கவிழ்ந்து விபத்து: 4 பேர் பலி
தென்கொரியாவின் தெற்கு கடற்கரை பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்டு கொண்டிருந்த படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தோனேசிய கடற்றொழிலாளர்கள் உள்பட பலர் கடற்றொழிலில் ஈடுபட்டு கொண்டிருந்த போது திடீரென அங்கு பாரிய அலை எழும்பியதால் கடற்றொழில் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
மீட்பு பணிகள்
இதுகுறித்து தகவலறிந்த தென்கொரிய கடலோரபொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று கடலில் தத்தளித்து கொண்டிருந்த கடற்றொழிலாளர்களை மற்றொரு படகு மூலம் கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.
இதன் போது மயங்கிய நிலையில் இருந்த குறித்த கடற்றொழிலாளர்களுக்கு வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் 4 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விபத்தில் 5 கடற்றொழிலாளர்கள் மாயமானதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதோடு 6 உஉலங்கு வானூர்தி மற்றும் 12 ரோந்து படகுகளும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan
