தென்னிலங்கையில் நடுக்கடலில் விபத்துக்குள்ளான படகு! இருவர் பலி

Fishing Sri Lanka Fisherman
By Rakesh Jun 28, 2025 09:50 PM GMT
Report

புதிய இணைப்பு

மாத்தறை - தேவேந்திரமுனை துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட கடற்றொழில் படகு ஒன்று இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகியிருந்தது.

இந்நிலையில் குறித்த படகில் 5 கடற்றொழிலாளர்கள் இருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் எனவும், இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் எனவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இத்தாலியில் 21 நகரங்களுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை

இத்தாலியில் 21 நகரங்களுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை

முதலாம் இணைப்பு 

இலங்கையின் கடற்பரப்பில் இன்று சனிக்கிழமை காலை இரண்டு படகு விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன என்று தகவல்கள் கிடைத்துள்ள நிலையில், விபத்துக்களின் விளைவாக கடற்றொழிலாளர்கள் பலர் காணாமல்போயுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

தென்னிலங்கையில் நடுக்கடலில் விபத்துக்குள்ளான படகு! இருவர் பலி | Boat Accidents In Two Different Places

இந்நிலையில் அவர்களைத் தேடும் பணிகள் நடைபெற்று வருவதாக  கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு இந்தச் சம்பவங்கள் குறித்து தீவிர கவனம் செலுத்தி வருகின்றது என்றும், காணாமல்போன கடற்றொழிலாளர்களைக் கண்டுபிடிப்பதற்கும், தொடர்புடைய நிவாரணங்களை வழங்குவதற்கும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் கடற்றொழில் சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக உறுதியுடன் இருப்பதாகவும் வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா ஆணையாளரை சந்தித்து விட்டு வீடு திரும்பிய தாய்க்கு நேர்ந்த கதி - அதிர்ச்சியில் குடும்பம்

ஐ.நா ஆணையாளரை சந்தித்து விட்டு வீடு திரும்பிய தாய்க்கு நேர்ந்த கதி - அதிர்ச்சியில் குடும்பம்

இத்தகைய விபத்துக்களைக் குறைப்பதற்கான தேவையான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் எடுக்கப்படும் என்று கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹாவத்த தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சு அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

தேவேந்திரமுனை விபத்து

மாத்தறை மாவட்டத்தின் தேவேந்திரமுனை துறைமுகத்தில் இருந்து கடற்றொழில் நடவடிக்கைகளுக்காகச் சென்ற எம்.டி.ஆர் 263 தினேஷ் 4 என்ற பல நாள் கடற்றொழில்ப் படகு, ஒரு வர்த்தகக் கப்பலுடன் மோதியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.

தென்னிலங்கையில் நடுக்கடலில் விபத்துக்குள்ளான படகு! இருவர் பலி | Boat Accidents In Two Different Places

இந்தப் படகில் ஐந்து கடற்றொழிலாளர்கள் இருந்தனர். படகின் மேல் பகுதியில் இருந்த ஒரு கடற்றொழிலாளர் மீட்கப்பட்டு, சிகிச்சைகளுக்காக இலங்கைக் கடற்படையினரால் கரைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளார்.

மற்ற நான்கு பேரையும் தேடும் நடவடிக்கையில் இலங்கைக் கடற்படையினர் இன்று காலை 7:30 மணி முதல் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தச் சம்பவம் கரையில் இருந்து சுமார் 20 கடல் மைல்கள் தொலைவில் வர்த்தகக் கப்பல்கள் செல்லும் பாதையில் நிகழ்ந்துள்ளது. கடற்றொழில் படகின் கீழ்ப் பகுதியில் ஏனைய கடற்றொழிலாளர்கள் இருக்கின்றார்களா என்ற சந்தேகத்தின் பேரில், இலங்கைக் கடற்படையினர் சுழியோடிகளுடன் இணைந்து அந்தப் பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, மற்ற கடற்றொழிலாளர் களைத் தேடும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹாவத்த உறுதிப்படுத்தினார்.

இந்தியா-அஹ்மதாபாத் விமான விபத்து: அடையாளம் காணப்பட்ட இறுதி உடல்

இந்தியா-அஹ்மதாபாத் விமான விபத்து: அடையாளம் காணப்பட்ட இறுதி உடல்

பேருவளை விபத்து

களுத்துறை மாவட்டத்தின் பேருவளை, மொரகல்லை பிரதேசத்தில் இன்று காலை இரண்டு கடற்றொழிலாளர்கள் சென்ற ஒரு நாள் படகு விபத்துக்குள்ளானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிலங்கையில் நடுக்கடலில் விபத்துக்குள்ளான படகு! இருவர் பலி | Boat Accidents In Two Different Places

கடற்றொழிலாளர்கள் இல்லாமல் படகு கடலில் காணப்பட்டது. அது தற்போது கரைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. காணாமல்போன இரண்டு கடற்றொழிலாளர்களையும் தேடும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்தச் சம்பவம் கரையிலிருந்து மிக அருகில் நிகழ்ந்துள்ளது. கடற்றொழிலாளர்ர்கள் அடையாளம் காணப்படவில்லை என்றாலும், இரண்டு கடற்றொழிலாளர்கள் இந்தப் படகில் சென்றது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த இரண்டு கடற்றொழிலாளர்ர்களையும் கண்டுபிடிப்பதற்கான முழு முயற்சியும் எடுக்கப்பட்டு வருகின்றது என்று கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

இஸ்ரேலை பாதுகாக்க 20சதவீத "THAAD" ஏவுகணைகளை பயன்படுத்திய அமெரிக்கா..

இஸ்ரேலை பாதுகாக்க 20சதவீத "THAAD" ஏவுகணைகளை பயன்படுத்திய அமெரிக்கா..

வவுனியாவில் மாவீரர்களுக்கு அஞ்சலி: புறக்கணித்தவாறு அமர்ந்திருந்த உள்ளூராட்சி ஆணையாளர்

வவுனியாவில் மாவீரர்களுக்கு அஞ்சலி: புறக்கணித்தவாறு அமர்ந்திருந்த உள்ளூராட்சி ஆணையாளர்

மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US