யாழ்.போதனா வைத்தியசாலையில் குருதி தட்டுப்பாடு: இரத்த வங்கியினர் விடுத்துள்ள அறிவிப்பு
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் O+ இரத்த வகைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையால் அந்த வகை இரத்தம் உள்ள குருதி கொடையாளர்கள் யாழ். இரத்த வங்கிக்கு நேரில் வருகை தந்து குருதி கொடை வழங்குமாறு இரத்த வங்கியினர் அறிவித்துள்ளனர்.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் இரத்த தான முகாம்களை நடாத்த விரும்புவோர் அதற்கான முயற்சிகளை முன்னெடுக்குமாறும் இரத்த வங்கியினர் தெரிவித்துள்ளனர்.
இரத்த தானம் தொடர்பான மேலதிக விபரங்களை தெரிந்து கொள்வதற்கு 077 - 2105375 எனும் தொலைபேசி இலக்கம் ஊடாக தொடர்பு கொள்ளுமாறு இரத்த வங்கியினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.