முள்ளிவாய்க்கால் பகுதியில் இராணுவத்தினரால் செயலிழக்கம் செய்யப்பட்ட வெடிகுண்டு
முள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பத்தைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றதாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
மக்கள் தெரிவித்த தகவலுக்கு அமையச் சம்பவ இடத்திற்கு ஊடகவியலாளர்கள் சென்றபோது குறித்த பகுதியில் இராணுவத்தினர் குண்டு ஒன்றைச் செயலிழக்கச் செய்தமை தெரியவந்துள்ளது.
முள்ளிவாய்க்கால் பகுதி மணல் தரையிலிருந்து மீட்கப்பட்ட குண்டு ஒன்றே இவ்வாறு இராணுவத்தினரால் வெடிக்க வைத்து தகர்க்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆங்காங்கே காணப்படும் வெடிபொருட்களை மீட்கும்
இராணுவத்தினர் மற்றும் அதிரடிப்படையினர், பொலிஸாரும் இணைந்து அதனை
நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாகச் செயலிழக்கச் செய்து வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.