யாழில் குதிரை வண்டியில் பயணிக்கும் அருட்தந்தை(Photo)
யாழ்ப்பாணத்தில் எரிபொருள் தட்டுப்பாட்டால் குதிரை வண்டியில் தனது பயணத்தை அருட்தந்தையர் ஒருவர் மேற்கொண்டுள்ளார்.
எரிபொருள் தட்டுப்பாடு
நாடு பூராகவும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் யாழில் கிறிஸ்தவ அருட்தந்தை ஒருவர் தனக்குத் தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதில் இடர்பாடுகள் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
குதிரை வண்டி
இதன் காரணமாக குதிரை வண்டியில் தனது வழமையான செயற்பாடுகளை மேற்கொள்வதாக யாழ்ப்பாணத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இவர் இன்றைய தினம் யாழ் நகரத்தில் தனது வழமையான செயற்பாடுகள் மேற்கொள்வதற்கு
குதிரை வண்டியில் பயணம் செய்த நிலையில் வீதியில் பயணித்தோர் அனைவரும்
வியப்புடன் அவதானித்துள்ளனர்.