யாழில் கட்டுப்பாடுகளை மீறி பிறந்தநாள் கொண்டாட்டம்! - 19 பேருக்கு நேர்ந்த கதி
அல்லைப்பிட்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் பிறந்தநாள் கொண்டாடிய 19 பேர் அதே விடுதியில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள நட்சத்திர விடுதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற 19 பேர் நண்பர் ஒருவரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு முற்பட்டுள்ளனர்.
அதனை அறிந்த அந்தப் பகுதிக்கு பொறுப்பான பொதுச் சுகாதாரப் பரிசோதகர், ஊர்காவற்றுறை பொலிஸாருடன் சென்று தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியதாக 19 பேரையும் அந்த விடுதியிலேயே சுயதனிமைப்படுத்தினார்.
அத்துடன், நட்சத்திர விடுதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. சுயதனிமைப்படுத்தப்பட்ட அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.





ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam

Gen Z போராட்டக்காரர்களுடன் இணைந்த ராணுவம் - நேபாளத்தையடுத்து மற்றொரு நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு? News Lankasri
