கொழும்பு பள்ளிவாசலில் நபிகள் நாயகம் முஹம்மது பிறப்பை முன்னிட்டு விசேட நிகழ்வு
முஸ்லிம்களினால் கொண்டாடப்படும் புனித மீலாதுன் நபிகள் நாயகம் பிறப்பை முன்னிட்டு கொழும்பு உம்மு ஸாவியா பள்ளிவாசல் நிர்வாக சபையின் ஏற்பாட்டில் 124 ஆவது வருடாந்த “ஷமாயிலுல் முஹம்மதிய்யா” நிகழ்வு நடைபெற்றுள்ளது.
கொழும்பு உம்மு ஸாவியா பள்ளிவாசலில் நேற்று நடைபெற்ற இந்நிகழ்வு, அஜ்வர்த் அல்-பாஸி அரபுக் கல்லூரியின் அதிபரும் கலீபத்துல் ஷாதுலி அல்-ஆலிம் அல்ஹாஜ் மௌலவி அஹ்மத் சூஃபி (மஹ்லரி) தலைமையில் இடம்பெற்றுள்ளது.
125ஆவது ஆண்டு விழா
பள்ளிவாசல் தலைவர் அல்-ஹாஜ் மக்கி ஹாஷிம், நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், உலமாக்கள், முகத்த மீன்கள் மற்றும் இக்வான்கள் உள்ளிட்ட பலர் இம்மஜ்லிஸில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய பள்ளிவாசல் சமயக் குழுவின் தலைவரும் முன்னாள் பாலஸ்தீன தூதுவருமான அல்-ஹாஜ் பவ்ஸான் அன்வர், கலீபத்துல் ஷாதுலி அல்-ஆலிம் அல்ஹாஜ் மௌலவி அஹ்மத் சூஃபி, நம்பிக்கையாளர் சபை தலைவர் அல்-ஹாஜ் மக்கி ஹாஷிம், நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் முஸ்லிம் சேவை உள்ளிட்ட அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
மேலும், இந்நிகழ்வு அடுத்த ஆண்டு 125ஆவது ஆண்டு விழாவாக கொண்டாட பட உள்ளதாகவும், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை குறிக்கும் வகையில் நினைவு முத்திரையொன்று வெளியிடப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையிலும் உலகெங்கிலும் அமைதி, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவம் நிலவ வேண்டி சிறப்பு துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 10