ட்ரம்ப் உடனான விவாதத்தின்போது தூங்கிவிட்டேன் : சமாளித்தாரா பைடன்..!
ட்ரம்ப் உடனான விவாத நிகழ்ச்சியின்போது கிட்டத்தட்ட தூங்கிவிட்டதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
சிஎன்என் செய்தி நிறுவனம் சார்பில் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்கள் ஜோ பைடன், டொனால்டு ட்ரம்ப் இடையேயான நேருக்கு நேர் விவாதம் கடந்த 28ம் தேதி நடைபெற்றது.
பரபரப்பாக நடந்த இந்த விவாதத்தில் டிரம்ப், பைடன் என இருவரும் ஒருவர் மீது ஒருவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
இந்த விவாதத்தின்போது ட்ரம்ப்பின் குற்றச்சாட்டுகளுக்கு பைடன் சரிவர பதில் அளிக்கவில்லை. மேலும், விவாதம் முழுவதும் ட்ரம்ப்பின் ஆதிக்கமே இருந்தது.
பல்வேறு நாடுகளுக்கு பயணம்
விவாதத்திற்குப்பின் நடந்த வாக்கெடுப்பில் விவாதத்தில் ட்ரம்ப் வெற்றிபெற்றதாக முடிவுகள் வெளியாகின.
இது தொடர்பில் பைடன் மேலும் தெரிவிக்கையில், விவாத நிகழ்ச்சிக்கு சில நாட்களுக்கு முன்பாக நான் பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டேன்.
அதில் மிகவும் சோர்வாக இருந்தேன். இந்த விவகாரத்தை நான் சரிவர கையாளவில்லை. எனது அதிகாரிகள் கூறியதையும் நான் கேட்கவில்லை. விவாத நிகழ்ச்சியின்போது மேடையிலேயே நான் கிட்டத்தட்ட தூங்கிவிட்டேன்.
நான் விவாத நிகழ்ச்சியில் சரிவர செயல்படவில்லை. அதற்கு நான் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன்' என்றார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 5ம் திகதி நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |