நாட்டில் வரி செலுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
வணிக உரிமையாளர்களிடம் இருந்து பணம் வசூலிப்பதற்காக உள்நாட்டு இறைவரி அதிகாரிகளைப் போல் ஆள்மாறாட்டம் செய்வோர் குறித்து உள்நாட்டு இறைவரி ஆணையாளர், வரி செலுத்துவோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எந்தவொரு நடவடிக்கைக்கும் முன்னர் உத்தியோகபூர்வ எழுத்துப்பூர்வ அறிவிப்புகளுடன் அனைத்து வரி வசூல்களும் சட்ட வழிகள் மூலம் நடத்தப்படும் என்று ஆணையாளர் தெளிவுபடுத்தியுள்ளார்.
சட்ட நடவடிக்கை
இந்தநிலையில், IRD என்ற உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இந்த மோசடி நடவடிக்கை குறித்து இலங்கை பொலிஸாரிடம் உடனடி சட்ட நடவடிக்கையை வலியுறுத்தியுள்ளது.

IRD சார்பாக வரிகளை வசூலிப்பதாகக் கூறி எவருக்கும் பணம் செலுத்த வேண்டாம் என வரி செலுத்துவோர் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அத்துடன் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அதிகாரப்பூர்வ IRD அலுவலகங்களுக்குச் செல்ல, வரி செலுத்துவோர் ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்றும் உள்நாட்டு இறைவரி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
கனடாவில் தீப்பற்றிய வீட்டுக்குள் சிக்கிய இளம்பெண்: அவரது கடைசி வார்த்தைகளை எண்ணிக் கலங்கும் குடும்பம் News Lankasri
முழு நேர பீட்சா தயாரிப்பு; இடையில் கிரிக்கெட் - இலங்கையில் பிறந்து இத்தாலியில் கலக்கும் கிரிஷான் News Lankasri
உள்நாட்டில் கடும் நெருக்கடி... இந்தியாவில் செயல்படத் தொடங்கிய பிரித்தானியப் பல்கலைக்கழகங்கள் News Lankasri