நல்லாட்சி அரசாங்கத்தின் அழிவுக்கான காரணத்தை கூறிய பெல்பொல விபஸ்சி தேரர்
சில அமைச்சர்கள் தவறான நபர்களை அருகில் வைத்துக்கொண்டதே நல்லாட்சி அரசாங்கம் அழிய காரணம் என பெல்பொல விபஸ்சி தேரர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் நேரடியாகவே தெரிவித்துள்ளார்.
முன்னாள் நிதியமைச்சர் ரொனி டி மெல்லின் 96 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது வீட்டில் நடந்த வைபவத்தில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
குறைந்தளவிலான அழைப்பாளர்கள் மாத்திரம் கலந்துக்கொண்ட இந்த வைபவத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்துகொண்டார்.
விபஸ்சி தேரரின் உரையை கேட்டுக்கொண்டிருந்த ரொனி டி மெல், “ நான் அமைச்சராக பதவி வகிக்கும் போது அப்படியான நபர்களை அருகில் சேர்த்துக்கொள்ளவில்லை” எனக் கூறியுள்ளார்.
இதற்கு எந்த பதிலையும் வழங்காது ரணில் விக்ரமசிங்க அமைதியாக இருந்தார் என வைபவத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.