மருத்துவர்கள் என்ன சொன்னாலும் மதுபானம் என்பதும் ஓர் உணவாகும்
மருத்துவர்கள் என்ன சொன்னாலும் மதுபானம் என்பதும் ஓர் உணவு வகையாகும் என விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அரிசி சார்ந்த சில துணை உற்பத்திகள் தடை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அரிசி இந்த நாட்டின் முக்கிய பயிராக இருப்பதால், அதைப் பயன்படுத்தி பல துணை உற்பத்திகள் செய்யப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரிசியில் பெறுமதி சேர்க்கப்படக்கூடிய வகையில் பிஸ்கட், கேக் மட்டுமல்லாது மது உற்பத்தியும் செய்ய வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், மதுபானம் ஒரு பகுதியினருக்கு உணவாகும் என்பதால், மருத்துவர்களின் கருத்துக்களை பொருட்படுத்தாமல் இதனை பரிசீலிக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
துபாயில் ICU-வில் தாய்: இந்தியா வர ரூ 50 லட்சம் கேட்கும் ஏர் ஆம்புலன்ஸ்: தவிக்கும் தமிழர் News Lankasri
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam