பயணக்கட்டுப்பாட்டை மீறுவோரை கண்டறிய மட்டக்களப்பில் விஷேட சோதனை நடவடிக்கைகள்
பயணக்கட்டுப்பாட்டை மீறுவோரை கண்டறியும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் விசேட பொலிஸ் குழுக்கள் இன்று காலை முதல் பரிசோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.
இதன்படி, மட்டக்களப்பு கல்லடி பாலம், அரசடி சந்தி, ஊரணி சந்தி போன்ற இடங்களில் வீதி தடைகள் ஏற்படுத்தப்பட்டு விசேட சோதனை நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
மட்டக்களப்புக்குள் நுழையும் அனைத்து வாகனங்களையும் அதன் அனுமதி பத்திரங்களை பரிசோதனை செய்துவதுடன், வியாபார நடவடிக்கைகள், அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்து வீதியில் நடமாடிய ஏனையோர்க்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன் அவர்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.