தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர் மீது தமிழரசு கட்சி உறுப்பினர் தாக்குதல்
மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயற்குழு உறுப்பினர் மற்றும் அவரது குழந்தை மீது தமிழரசு கட்சியின் இணைப்பாளர் ஒருவரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் வெல்லாவெளி கலைமகள் பாடசாலைக்கு முன்பாக நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு,வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயற்குழு உறுப்பினர் மற்றும் அவரது இரண்டரை வயது மகள் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயற்குழு உறுப்பினர் கோபாலன் பிரசாத் மற்றும் அவரது பெண் குழந்தை, மனைவி ஆகிய மூவரும் மோட்டார் சைக்கிளில் சென்ற போதே வழிமறித்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உள்ளூராட்சிமன்ற வேட்பாளர்
இந்த தாக்குதலை தமிழரசுக்கட்சியின் போரதீவுப்பற்று இணைப்பாளர் பிரதீப்குமார் என்பவர் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் போது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயற்குழு உறுப்பினரின் இரண்டரை வயது பெண் குழந்தை படுகாயமடைந்த நிலையில் மண்டூர் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் தமிழரசி கட்சியின் போரதீவுப்பற்று இணைப்பாளர் பிரதீப்குமார் வெல்லாவெளி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போரதீவுப்பற்று பிரதேச சபை சார்பாக போட்டியிடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri
