மட்டக்களப்பு திருடப்பட்ட மாடு மீட்பு! இறைச்சிகடை உரிமையாளர் கைது
மட்டக்களப்பு - கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பாலமீன்மடு பகுதியில் மாட்டுப்பட்டியில் காணாமல்போன மாடுகளில் ஒன்றை ஏறாவூரில் இறைச்சிக்காக மாடு வெட்டும் மடுவத்தில் இருந்து உயிருடன் நேற்று மீட்டுள்ளதாக இறைச்சிக்கடை முதலாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் மாட்டுப்பட்டியில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு முன்னர் 4 மாடுகள் காணாமல்போனதையடுத்து மாட்டின் உரிமையாளர் தேடிவந்துள்ளார்.
இந்த நிலையில் ஏறாவூர் பகுதியிலுள்ள மாடு வெட்டும் மடுவத்தில் காணாமல்போன மாடுகளில் ஒன்று அங்கு கட்டியிருப்பதை மாட்டின் உரிமையாளர் கண்டுள்ளார்.
இறைச்சிகடை உரிமையாளர் கைது
இதனையடுத்து அந்த மாட்டை இறைச்சிக்காக வெட்டுவதற்கு கொண்டுவந்த இறைச்சிக்கடை உரிமையாளரை கண்டுபிடித்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
இதனையடுத்து மாடு அறுக்கும் மடுவத்தில் கட்டியிருந்த மாட்டை அடையாளம் காட்டியதையடுத்து அதனை மீட்டதுடன், அந்த மாட்டை ஒருவரிடம் வாங்கியதாக தெரிவித்த மாட்டு இறைச்சி கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்தவரை இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற
நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தியதையடுத்து அவரை 14 நாட்கள் விளக்கமறியலில்
வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.