மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் முன்னெடுப்பு(Photos)
கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் 07ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்நிலையில் இன்றைய தினம்(03.08.2023) மட்டக்களப்பு மாநகரசபையினால் நுளம்பு பெருகும் இடங்கள் ஏற்படா வண்ணம் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் என்.சிவலிங்கத்தின் ஆலோசனையின் கீழ் மாநகரசபையின் பிரதி ஆணையாளர் உ.சிவராஜா தலைமையில் இந்த சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சிரமதான பணி

தற்போது நாட்டில் நிலவும் டெங்கின் தாக்கம் அதிகமான நிலையில் காணப்படுவதன் காரணமாக ஆலய வளாகத்தில் நுளம்பு பெருகும் இடங்கள் ஏற்படா வண்ணம் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆலயத்திற்கு வருகைதரும் பக்தர்கள் ஆலய சூழலை பேணும் வகையில் தமது கழிவுகளை அகற்றுமாறு இங்கு மாநகரசபையின் பிரதி ஆணையாளர் உ.சிவராஜாவினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |







விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam