மட்டக்களப்பு, யாழின் சில வீதிகளில் எழுதப்பட்டுள்ள “மாவீரர் நாள் நவம்பர் 27” என்ற வாசகம்
மாவீரர் தினத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் பல்வேறு செயற்பாடுகளில் மக்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு நடவடிக்கையாக மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் சில வீதிகளில் “மாவீரர் நாள் நவம்பர் 27” என எழுதப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் சில வீதிகளில் மாவீரர் நாள் 27 என எழுதி மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
சந்திவெளி பகுதியில் உள்ள வீதிகளில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் - கொடிகாமம் பருத்தித்துறை வீதியில் மாவீரர் நாள் நவம்பர் 27 என எழுதப்பட்டுள்ளது.
மாவீரர் வாரம் ஆரம்பம் முதல் வடக்கு கிழக்கில் இராணுவத்தினர், பொலிஸார், புலனாய்வாளர்கள் ஆகியோரின் சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கைகளும், கண்காணிப்புக்களும் தீவிரமாக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் அதிகாலை வேளை குறித்த வீதியில் மாவீரர் நாளை நினைவு கூறும் முகமாக "மாவீரர் நாள் நவம்பர் -27" என எழுதப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாரும், புலனாய்வுத்துறையினரும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
அமெரிக்காவால் வெனிசுலாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: கச்சா எண்ணெய் ஏற்றுமதி 75% வீழ்ச்சி News Lankasri
பிக் பாஸ் டைட்டில் ஜெயித்த திவ்யாவுக்கு ரூ.50 லட்சம் மட்டுமின்றி மேலும் ஒரு பெரிய பரிசு! என்ன பாருங்க Cineulagam
நிலாவுக்கு விவாகரத்து தரும் சோழன்.. அதிர்ச்சியில் நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது Cineulagam