மேய்ச்சல் தரையை மீட்டுதர கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியமாதவணை, மயிலத்தமடு பண்ணையாளர்கள் தங்களது மேய்ச்சல் தரைகளை தங்களுக்கு மீட்டுத்தர கோரி நான்காவது நாளாகவும் சுழற்சி முறையிலான கவன ஈர்ப்பு பேராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
மட்டக்களப்பு சித்தாண்டி பாடசாலைக்கு முன்பாக கடந்த வெள்ளிக்கிழமை காலை முதல் குறித்த போராட்டத்தில் பெரியமாதவணை, மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
நேற்றையதினம் (19.09.2023) தலையில் கறுப்பு துணியை அணிந்தவாறு போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடந்த புதன்கிழடை நடைபெற்ற விவசாய கூட்டத்தின் போது மேய்ச்சல் தரை அபகரிக்கப்படுவது தொடர்பாக எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க முடியாது என மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தெரிவித்ததை அடுத்து தங்களது மேய்ச்சல் தரையை மீட்டுத்தருமாறு கோரி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர்.
வாழ்வாதாரத்தினை இழந்த போராட்டம்
தமது நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி கடந்த நான்கு தினங்களாக போராடிவருகின்றபோதிலும் இதுவரையில் தமது கோரிக்கையினை தீர்த்துவைப்பதற்கான எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லையென பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் கடந்த நான்கு தினங்களாக தமது வாழ்வாதாரத்தினை இழந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்துவரும் நிலையில் மாவட்டத்தில் உள்ள அரசியல்வாதிகள் தமது பிரச்சினைகளை தீர்த்துவைக்க எந்தவித நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லையெனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் கலந்துகொண்டு போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.












மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கும் புதிய தொடர்... கமிட்டான சூப்பர் புதிய ஜோடி, யார் பாருங்க Cineulagam

இஸ்ரேலின் மொசாட் அமைப்புக்கு உளவு பார்த்த நபரை தூக்கிலிட்ட ஈரான்! அதிகரிக்கும் பதற்றம் News Lankasri

300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்.. இனி பண மழை கொட்டுமாம்..அதிர்ஷ்டம் யாருக்கு? Manithan

கடைசி டெஸ்டில் ஏஞ்சலோ மேத்யூஸ்! நீ உன் தேசத்திற்கு உண்மையான சேவகன் - ரோஹித் ஷர்மா பிரியாவிடை News Lankasri
